Back

1. Visuvaasathinaal | விசுவாசத்தினால்

E – Mai / 2 / 4 / T – 120

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்  

விசுவாசியே பதறாதே

கலங்காதே திகையாதே விசுவாசியே 

கல்வாரி நாயகன் கைவிடாரே

1 . தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும் 

பந்த பாசங்கள் அறுந்திட்டாலும் 

நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை 

சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்

2 . பிறர் வசை கூறி துன்புறுத்தி 

இல்லாதது சொல்லும்போது 

நீ மகிழ்ந்து களிகூரு 

விண் கைமாறு மிகுதியாகும் 

3 . கொடும் வறுமையில் உழன்றாலும் 

கடும் பசியினில் வாடினாலும் 

அன்று எலியாவை போஷித்தவர் 

இன்று உன் பசி ஆற்றிடாரோ

We use cookies to give you the best experience. Cookie Policy