Back

106 . Yeshuvin karangalai | இயேசுவின் கரங்களை

F – Maj / 6 / 8 / T – 125 

இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் – நான் 

இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் 

எதற்கும் பயம் இல்லையே 

இனியும் கவலை எனக்கில்லையே 

அல்லேலூயா ( 4 ) 

1 . இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன் 

இனிவரும் பலன் மேல் நோக்கமானேன் 

அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே

அரவணைக்கும் இயேசு போதும் போதுமே 

2 . அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம் 

அதிகமான கனமகிமை உண்டாக்கும் 

காண்கின்ற எல்லாமே அநித்தியம் 

காணாதவைகளோ நித்தியம்

3 . பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன் 

வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன் 

சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன் 

தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்

4 . கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன் 

கடும் புயல் வந்தாலும் அசைவதில்லை

எதையும் தாங்குவேன் இயேசுவுக்காய் 

இனியும் சோர்ந்து போவதே இல்லை

5 . ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்

அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன் 

கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே 

வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே

We use cookies to give you the best experience. Cookie Policy