Back

11 . Nandriyaal Thuthipaadu | நன்றியால் துதிபாடு

E – Maj / 2 / 4 / T – 128 

நன்றியால் துதிபாடு – நம் இயேசுவை 

நாவாலே என்றும் பாடு 

வல்லவர் நல்லவர் போதுமானவர்

வார்த்தையில் உண்மையுள்ளவர் – நன்றி 

1 . எரிகோ மதிலும் முன்னே வந்தாலும் 

இயேசு உந்தன் முன்னே செல்கிறார் 

கலங்கிடாதே திகைத்திடாதே 

துதியினால் இடிந்து விழும்

2. செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலும்

சிலுவையின் நிழலுண்டு 

பாடிடுவோம் துதித்திடுவோம்

பாதைகள் கிடைத்துவிடும்

3 . கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும் 

கொஞ்சமும் பயம் வேண்டாம்

இயேசு என்னும் நாமம் உண்டு 

இன்றே ஜெயித்திடுவோம்

We use cookies to give you the best experience. Cookie Policy