Back

113 . Rethakkottai | இரத்தக் கோட்டை

F – min / 2 / 4 | T – 125

 இரத்தக் கோட்டைக்குள்ளே 

நான் நுழைந்து விட்டேன் 

இனி எதுவும் அணுகாது 

எந்தத் தீங்கும் தீண்டாது 

1 . நேசரின் இரத்தம் என்மேலே 

நெருங்காது சாத்தான் 

பாசமாய் சிலுவையில் பலியானார் 

பாவத்தை வென்று விட்டார்

2 . இம்மட்டும் உதவின எபினேசரே 

இனியும் காத்திடுவார்

உலகிலே இருக்கும் அவனை விட 

என் தேவன் பெரியவரே

3 . தேவனே ஒளியும் மீட்புமானார் 

யாருக்கு அஞ்சிடுவேன் 

அவரே என் வாழ்வின் பெலனானார் 

யாருக்கு பயப்படுவேன்

4 . தாய் தன் பிள்ளையை மறந்தாலும் 

மறவாத என் நேசரே

ஆயனைப் போல நடத்துகிறீர் 

அபிஷேகம் செய்கின்றீர் – என்னை 

5 . மலைகள் குன்றுகள் விலகினாலும் 

மாறாது உம் கிருபை

அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர் 

அணைத்து சேர்த்துக் கொண்டீர்

We use cookies to give you the best experience. Cookie Policy