Back

119 . Anbe kalvari | அன்பே கல்வாரி

119 . அன்பே கல்வாரி

E – Maj / 4 / 4 / . T – 100 

அன்பே கல்வாரி அன்பே 

உம்மைப் பார்க்கையிலே 

என் உள்ளம் உடையுதப்பா 

1 . தாகம் தாகம் என்றீர் 

எனக்காய் ஏங்கி நின்றீர் 

பாவங்கள் சுமந்தீர் – எங்கள் 

பரிகார பலியானீர் – எங்கள்

2 . காயங்கள் பார்க்கின்றேன் 

கண்ணீர் வடிக்கின்றேன் . 

தூய திரு இரத்தமே 

துடிக்கும் தாயுள்ளமே

3 . அணைக்கும் கரங்களிலே 

ஆணிகளா சுவாமி ? 

நினைத்துப் பார்க்கையிலே ( என் ) 

நெஞ்சம் உருகுதையா

4. நெஞ்சிலே ஓர் ஊற்று 

நதியாய் பாயுதையா 

மனிதர்கள் மூழ்கணுமே 

மறுரூபம் ஆகணுமே – எல்லா

We use cookies to give you the best experience. Cookie Policy