Back

12 . Naan Unnai Vittu | நான் உன்னை விட்டு

E – min / 4 / 4 / T – 112

நான் உன்னை விட்டு விலகுவதில்லை 

நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை

நான் உன்னைக் காண்கின்ற தேவன்

கண்மணி போல் உன்னைக் காப்பேன் ( 2 )

1 . பயப்படாதே நீ மனமே – நான் 

காத்திடுவேன் உன்னை தினமே 

அற்புதங்கள் நான் செய்திடுவேன் 

உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்

2 , திகையாதே கலங்காதே மனமே – நான்

உன்னுடனிருக்க பயமேன் 

கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – உன்

கவலைகள் யாவையும் போக்கிடுவேன் 

3 . அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்

அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் 

அத்திமரம் போல் செழித்திடுவாய் நான் 

ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் 

4 . நீதியின் வலக்கரத்தாலே உன்னை 

தாங்குவேன் நான் அன்பினாலே

ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்

தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்

We use cookies to give you the best experience. Cookie Policy