Back

143 . Thagamullavan | தாகமுள்ளவன்

143 . தாகமுள்ளவன்

F – Min / 6 / 8 / T – 112 

தாகமுள்ளவன் மேல் 

தண்ணீரை ஊற்றுவேன் என்றீர் 

வறண்ட நிலத்தில் 

ஆறுகளை ஊற்றுவேன் என்றீர்

ஊற்றும் ஐயா உம் வல்லமையை 

தாகத்தோடு காத்திருக்கிறேன் – நான் 

1 . மாம்சமான யாவர் மேலும் 

ஊற்ற வேண்டுமே

மக்களெல்லாம் இறைவாக்கு 

உரைக்க வேண்டுமே 

2 . முதியோர் மேலும் இளைஞர் மேலும் 

ஊற்ற வேண்டுமே

கனவுகள் காட்சிகள் 

காண வேண்டுமே 

3 . நீரோடை அருகிலுள்ள 

மரங்களைப் போல  

நித்தமும் தவறாமல் 

கனி தர வேண்டும் 

4 . கல்லான இதயத்தை 

எடுத்திட வேண்டும்

சதையான இதயத்தைப் 

பொருத்திட வேண்டும் 

5 . வனாந்தரம் செழிப்பான 

தோட்டமாகணும்

வயல்வெளி 

அடர்ந்த காடாகணும் 

6 . நீதியும் நேர்மையும் 

தழைக்க வேண்டுமே

நல்வாழ்வும் நம்பிக்கையும் 

வளர வேண்டுமே

We use cookies to give you the best experience. Cookie Policy