Back

150 . Ummodu irupathu | உம்மோடு இருப்பது

150 . உம்மோடு இருப்பது

E – Maj / 3 / 4 / 1135 

உம்மோடு இருப்பதுதான் 

உள்ளத்தின் வாஞ்சையையா

உம் சித்தம் செய்வது தான் 

இதயத்தின் ஏக்கமையா  

இயேசையா உம்மைத்தானே 

என் முன்னே நிறுத்தியுள்ளேன் 

1 . எனக்காக யாவையும் செய்பவரே 

செய்து முடிப்பவரே  

என் பாரங்கள் என் சுமைகள் – 2 

உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் – 2 – 

2 . இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் 

கிருபையும் உள்ளவரே  

என் ஜீவனை அழிவில் நின்று 

மீட்டவரே என் மேய்ப்பரே – 

3 . எபிநேசரே எல்எலியோன்  

என்றுமே உயர்ந்தவரே

எல்ஷடாய் ( சர்வ ) வல்லவரே  

எல்ரோயீ காண்பவரே  

4 . மன்னிப்பதில் வள்ளல் நீரே 

சுகம் தரும் தெய்வம் நீரே – 

உம் அன்பையும் இரக்கத்தையும் 

மணி முடியாய் சூட்டுகின்றீர்

We use cookies to give you the best experience. Cookie Policy