Back

163 . Thedi yeshu vanthar | தேடி இயேசு வந்தார்  

163 . தேடி இயேசு வந்தார்  

D – min / 6 / 8 / T – 100

தேடி இயேசு வந்தார் 

என்னைத் தேற்றி வாழவைத்தார் 

1 . கண்ணீர் கடலினிலே 

நான் கதறி மூழ்கையிலே 

கர்த்தர் தம் கரம் நீட்டினார் 

என் கண்ணீரெல்லாம் துடைத்தார் 

2 . பாவச் சேற்றினிலே 

நான் மூழ்கிப் போகையிலே 

கல்வாரி இரத்தத்தாலே 

கழுவி மீட்டுக் கொண்டார் 

3 . நோயின் பிடியினிலே 

நான் வாடித் தவிக்கையிலே 

இயேசுவின் காயங்களால் 

சுகமானேன் சுகமானேன் – நான்

4 . எத்தனை ஆண்டுகளோ – நான் 

இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன் 

மகராஜன் இயேசு வந்தார் 

மகனாய் ஏற்றுக் கொண்டார் – என்னை

We use cookies to give you the best experience. Cookie Policy