Back

193 . Thaimadiyil | தாய்மடியில்

193 . தாய்மடியில்

C – min / 3 / 4 / T – 140  

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல 

தகப்பனே உம்மடியில் சாய்த்துவிட்டேன் நான் 

1 . கவலையில்லையே கலக்கம் இல்லையே 

கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் – நான் 

எதைக் குறித்தும் பயமில்லையே 

என் நேசர் நடத்துகிறீர் தினம் 

2 . செய்த நன்மைகள் நினைக்கின்றேன் 

நன்றியோடு துதிக்கின்றேன் – நான் 

கைவிடாத என் ஆயனே – என்னை 

கல்வாரி நாயகனே – என் 

3 . துணையாளரே துணையாளரே 

இணையில்லா மணவாளரே – என் 

உணவாக வந்தீரையா 

உயிரோடு கலந்தீரையா – என் 

4 . உம்மைத் தானே பற்றிக் கொண்டேன் 

உம் தோளில் அமர்ந்துவிட்டேன் – நான் 

உந்தன் சிறகுகள் நிழல்தனிலே 

உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த 

5 . அதிகாலமே தேடுகிறேன் 

ஆர்வமுடன் நாடுகிறேன் – நான் 

உயிர்வாழும் நாட்களெல்லாம் 

உம் நாமம் சொல்வேனையா – நான்

We use cookies to give you the best experience. Cookie Policy