Back

199 . Kartharai nambinoar | கர்த்தரை நம்பினோர் 

199 . கர்த்தரை நம்பினோர் 

D – Maj / 3 / 4 | T – 140 

கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் 

சீயோன் மலைபோல் உறுதியுடன் 

அசையாமல் இருப்பார்கள் – 2 

1 . எருசலேம் நகரம் மலைகளால் 

எப்போதும் சூழ்ந்து இருப்பது போல் 

இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை 

சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் 

2 . வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு 

கனிதரும் மரமாய் வளர்வார்கள் 

கோடை காலத்தில் பயமில்லை 

வறட்சி வந்தாலும் கவலையில்லை 

3 . மனைவி கனிதரும் திராட்சைச் செடி . 

பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல் 

இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள் 

இடைவிடாமல் ஜெபிப்பார்கள் 

4 . கர்த்தரை நேசித்து அவர் வழியில் 

நடக்கும் மனிதர் பேறுபெற்றோர் 

உழைப்பின் பயனை உண்பார்கள் 

நன்மையும் நலமும் பெறுவார்கள்

We use cookies to give you the best experience. Cookie Policy