Back

205 . Nadathathellam | நடந்ததெல்லாம் 

205 . நடந்ததெல்லாம் 

D – Maj / 6 / 8 / T – 125 

நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே 

நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே 

நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே 

நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே 

நன்றி ( 2 ) எல்லாம் நன்மைக்கே நன்றி 

1 . தீமைகளை நன்மையாக மாற்றினீர் 

துன்பங்களை இன்பமாக மாற்றினீர் – நன்றி 

2 . சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி 

சிந்தைதனை மாற்றினீர் நன்றி 

3 . உள்ளான மனிதனை புதிதாக்கி 

உடைத்து உருமாற்றி நடத்துகிறீர் 

4 . என் கிருபை உனக்குப் போதும் என்றீர் 

பெலவீனத்திலே பெலன் என்றீர் 

5 . தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி 

தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி 

6 . விசுவாசப்புடமிட்டீர் நன்றி 

பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி 

7 . கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி 

மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி 

We use cookies to give you the best experience. Cookie Policy