Back

21 . Yaar Vendum | யார் வேண்டும்

E – Mai 3 / 4 / T – 135 

யார் வேண்டும் நாதா நீரல்லவோ 

எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ 

பாழாகும் லோகம் வேண்டாமையா 

வீணான வாழ்க்கை வெறுத்தேனையா 

1 . உலகத்தின் செல்வம் நிலையாகுமோ 

பேர் புகழ் கல்வி அழியாததோ 

பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை 

பதில் என்ன சொல்வேன் நீரே போதும் 

2 . சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம் 

பேரின்ப நாதா நீர் போதாதா 

யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ 

எங்கே நான் போவேன் உம்மையல்லால் 

3 . என்னைத் தள்ளினால் எங்கே போவேன் 

அடைக்கலம் ஏது உம்மையல்லால் 

கல்வாரி இன்றி கதியில்லையே 

கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன் 

We use cookies to give you the best experience. Cookie Policy