Back

219. Thuthiyin Aadai | துதியின் ஆடை 

219. துதியின் ஆடை 

E – Maj / 6 / 8 / T – 115 

துதியின் ஆடை அணிந்து 

துயரம் எல்லாம் மறந்து 

துதித்து மகிழ்ந்திருப்போம் – நம் 

தூயவரில் மகிழ்ந்திருப்போம் 

1 . இந்த நாள் கர்த்தர் தந்த நாள் 

இதிலே களிகூறுவோம்

புலம்பல் இல்ல இனி அழுகையில்ல 

இன்று புசித்துக் கொடுத்துக் கொண்டாடுவோம் 

துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம் 

துயரம் அனைத்தும் மறந்திருப்போம் 

2 . கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால் 

அது தானே நமது பெலன்

எத்தனையோ நன்மை செய்தவரை 

இன்று ஏற்றிப் போற்றிப் புகழ்ந்திடுவோம் 

3 . நன்றியோடும் புகழ் பாடலோடும் 

அவர் வாசலில் நுழைந்திடுவோம் 

நல்லவரே கிருபை உள்ளவரே 

என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம்

4 . புலம்பலுக்கு பதில் ஆனந்தமே 

இன்று ஆனந்தம் ஆனந்தமே 

ஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு 

இன்று உற்சாக ஆவி வந்தாச்சு

5 . துயரத்துக்கு பதில் ஆறுதலே 

இன்று ஆறுதல் ஆறுதலே 

சாம்பலுக்குப் பதில் சிங்காரமே 

இன்று சிங்காரம் சிங்காரமே

6 . கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார் 

அவரின் ஜனங்கள் நாம் 

அவர் தாமே நம்மை நடத்துகின்றார் 

அவரின் ஆடுகள் நாம்

We use cookies to give you the best experience. Cookie Policy