Back

229 . kudumae ellam | கூடுமே எல்லாம் 

 229 , கூடுமே எல்லாம் 

D – Maj / 6 / 8 / T – 115 

கூடுமே எல்லாம் கூடுமே 

உம்மாலே எல்லாம் கூடும் 

கூடாதது ஒன்றுமில்லை உம்மால் 

கூடாதது ஒன்றுமில்லை 

1 . கடல் மீது நடந்தீரையா 

கடும் புயல் அடக்கினீரே 

சாத்தானை ஒடுக்கினீரே 

சர்வ வல்லவரே 

2 . செங்கடல் உம்மைக் கண்டு 

ஓட்டம் பிடித்ததையா 

யோர்தான் உம்மைக் கண்டு 

பின்னோக்கிச் சென்றதையா 

3 . மரித்து உயிர்த்தீரையா 

மரணத்தை ஜெயித்தீரையா 

மறுபடி வருவீரையா 

உருமாற்றம் தருவீரையா 

4 . உம் நாமம் சொன்னால் போதும் 

பேய்கள் ஓடுதையா 

உம் பெயரால் கை நீட்டினால் 

நோய்கள் மறையுதையா 

5 . மலைகள் செம்மறி போல் 

துள்ளியது ஏன் ஐயா 

குன்றுகள் ஆடுகள் போல் 

குதித்ததும் ஏன் ஐயா 

6 . வனாந்தர பாதையிலே 

ஜனங்களை நடத்தினீரே 

கற்பாறை கன்மலையை 

நீரூற்றாய் மாற்றினீரே 

7 , உடல் கொண்ட அனைவருக்கும் 

உணவு ஊட்டுகிறீர் 

கரையும் காகங்களுக்கு 

இரை கொடுத்து மகிழ்கிறீர் 

8 . பகலை ஆள்வதற்கு 

கதிரவனை உருவாக்கினீர் 

இரடிவ ஆள்வதற்கு 

விண்மீனை உருவாக்கினீர்

We use cookies to give you the best experience. Cookie Policy