Back

252 . Andavarai Ekalamum | ஆண்ட வரை எக்காலமும் 

252 . ஆண்ட வரை எக்காலமும் 

E – Maj / 6 / 8 / T – 130 

ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்

அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் 

1 . என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள் 

ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் 

நடனமாடி நன்றி சொல்வோம் . . . . 

2 . ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார் 

எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் 

3 . அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன் 

எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல 

4 . பிள்ளை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே 

நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே
 

5 . கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்  

அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் 

6 . சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும் 

ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை

We use cookies to give you the best experience. Cookie Policy