Back

260 . Manamirangum | மனமிரங்கும் 

260 . மனமிரங்கும் 

D – Min / 4 / 4 | T – 115 

மனமிரங்கும் தெய்வம் இயேசு 

சுகம் தந்து நடத்திச் செல்வார் 

யேகோவா ரஃப்பா . . . . . . . இன்றும் வாழ்கிறார் 

சுகம் தரும் தெய்வம் இயேசு 

சுகம் இன்று தருகிறார்

1 . பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் – மாமி 

கரத்தைப் பிடித்துத் தூக்கினார் 

காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று – அவள் 

கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள் 

2 . குஷ்டரோகியைக் கண்டார் – இயேசு 

கரங்கள் நீட்டித் தொட்டார் 

சித்தமுண்டு சுத்தமாகு – என்று 

சொல்லி சுகத்தைத் தந்தார் 

3 . நிமிர முடியாத கூனி – அன்று 

இயேசு அவளைக் கண்டார் 

கைகள் அவள் மேலே வைத்தார் – உடன் 

நிமிர்ந்து துதிக்கச் செய்தார் 

4 . பிறவிக் குருடன் பர்த்திமேயு அன்று 

இயேசுவே இரங்கும் என்றான் 

பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன் 

இயேசு பின்னே நடந்தான்
 

5 . கதறும் பேதுருவைக் கண்டு – இயேசு 

கரங்கள் நீட்டிப் பிடித்தார் 

படகில் ஏறச் செய்து – அவர் 

கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார்

We use cookies to give you the best experience. Cookie Policy