Back

274 . Vaikarayil | வைகறையில் 

274 . வைகறையில் 

C – min / 6 / 8 / T – 95 

வைகறையில் ( காலைநேரம் ) உமக்காக 

வழி மேல் விழி வைத்து 

காத்திருக்கின்றேன் இறைவா 

என் ஜெபம் கேட்டு பதில் தாரும் 

பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும் 

1 . உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால் 

பயபக்தியோடு பணிந்து கொண்டேன் 

நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில் 

குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் 

2 . ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா 

உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே 

நீர்தானே எனது உரிமைச் சொத்து : 

எனக்குரிய பங்கும் நீர்தானய்யா 

3 . படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர் 

அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர் 

என் இதயம் பூரித்து துள்ளுகின்றது 

என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது 

4 . காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால் 

நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன் 

எப்போதும் என் முன்னே நீர்தானய்யா 

ஒருபோதும் அசைவுற விடமாட்டீர் 

We use cookies to give you the best experience. Cookie Policy