Back

280 . Aaravaram | ஆரவாரம் 

280 . ஆரவாரம் 

E – min / 6 / 8 / T – 120 

ஆரவாரம் ஆர்ப்பாட்டம் 

அப்பா சந்நிதியில் 

நாளெல்லாம் கொண்டாட்டம் 

நல்லவர் முன்னிலையில் 

நன்றிப் பாடல் தினமும் பாடு ( வோம் ) 

நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம் ) 

1 . கல்வாரி சிலுவையிலே கர்த்தர் 

இயேசு வெற்றி சிறந்தார் 

கண்ணீரை மாற்றி நம்மை 

காலமெல்லாம் மகிழச் செய்தார் 

2 . கிறிஸ்துவை நம்பினதால் 

பிதாவுக்குப் பிள்ளையானோம் 

அப்பான்னு கூப்பிடப்பண்ணும் 

ஆவியாலே நிரப்பப்பட்டோம் 

3 . உயிர்த்த கிறிஸ்து நம்ம 

உள்ளத்திலே வந்துவிட்டார் 

சாவுக்கேதுவான நம்ம 

சரீரங்களை உயிர்ப்பிக்கின்றார் 

4 . ஆவிக்கேற்ற பலி செலுத்தும் 

ஆசாரிய கூட்டம் நாம் 

வெளிச்சமாய் மாற்றியவர் 

புகழ்ச்சிதனை பாடிடுவோம் 

5 . துயரம் நீக்கிவிட்டார் 

கொண்டாட்டத்தின் ஆடை தந்தார் 

ஒடுங்கின ஆவி நீக்கி 

துதி என்னும் உடையை தந்தார் 

6 . நீதியின் சால்வை தந்து , 

இரட்சிப்பாலே போர்த்துவிட்டார் 

மணமகன் மணமகள் போல் 

அலங்கரித்து மகிழ்கின்றார் 

7 . இயேசுவின் பெயராலும் 

ஆவியாலும் கழுவப்பட்டோம் 

நீதிமானாய் மாற்றப்பட்டு 

தூய்மையான பிள்ளைகளானோம் 

8 . மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் 

கட்டப்பட்ட மாளிகை நாம் 

ஆவிதங்கும் ஆலயமாய் 

வளர்கின்ற கோபுரம் நாம் 

9 . விண்ண கமே நம் நாடு 

வருகைக்காக காத்திருப்போம் 

அற்பமான நமது உடல் 

அப்பா போல மாறிடுமே 

We use cookies to give you the best experience. Cookie Policy