Back

286 . Neethiyil | நீதியில் 

286 . நீதியில் 

F – Maj | 2 / 4 | T – 140 

நீதியில் நிலைத்திருந்து – உம் 

திருமுகம் நான் காண்பேன் 

உயிர்த்தெழும் போது – உம் 

சாயலால் திருப்தியாவேன் 

1 . தேவனே , நீர் என் தேவன் 

அதிகாலமே தேடி வந்தேன் 

நீரின்றி வறண்ட நிலம்போல் 

ஏங்குகிறேன் தினம் உமக்காய் 

அல்லேலூயா ஓசன்னா ( 4 ) 

2 . ஜீவனை விட உம் அன்பு  

அது எத்தனை நல்லது 

புகழ்ந்திடுமே . என் உதடு 

மகிழ்ந்திடுமே , என் உள்ளம் 

3 , உயிர்வாழும் நாட்களெல்லாம் 

உம் நாமம் சொல்லித் துதிப்பேன் 

அறுசுவை உண்பது போல 

திருப்தியாகும் என் ஆன்மா 

4 . படுக்கையிலே உம்மை நினைப்பேன் 

இராச்சாமத்தில் தியானம் செய்வேன் 

துணையாளரே , உம் நிழலை 

தொடர்ந்து , நடந்து வளர்வேன் .

We use cookies to give you the best experience. Cookie Policy