Back

298 . Vazhnaalellam | வாழ்நாளெல்லாம் 

F – Maj / 4 / 4 / T – 90 

வாழ்நாளெல்லாம் ( காலைதோறும் ) 

களிகூர்ந்து மகிழும்படி 

திருப்தியாக்கும் உம் கிருபையினால்
 

1 . புகலிடம் நீரே பூமியிலே 

அடைக்கலம் நீரே தலைமுறைதோறும் 

நல்லவரே வல்லவரே 

நன்றியையா நாள் முழுதும் 

2 . உலகமும் பூமியும் தோன்றுமுன்னே 

என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே 

3 . துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு 

ஈடாக என்னை மகிழச் செய்யும் 

4 . அற்புத செயல்கள் காணச் செய்யும் 

மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் 

5 . செய்யும் செயல்களைச் செம்மைப்படுத்தும் 

செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் 

6 . நாட்களை எண்ணும் அறிவைத் தாரும் 

ஞானம் நிறைந்த இதயம் தாரும் 
 

We use cookies to give you the best experience. Cookie Policy