Back

30 . Karam Pidithu | கரம்பிடித்து

F – min / 6 / 8 / T – 120 

கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை 

களிப்போடு துதிபாடி போற்றுவோம் – 2 

ஆமென் அல்லேலூயா – 4 

1 . பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே 

இளைப்பாறச் செய்கின்றார் இயேசு 

களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு 

கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 

2 . நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார் 

நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார் 

நீதியின் பாதையிலே நடத்துவார் 

நிழல்போல நம் வாழ்வைத் தொடருவார் 

3 . எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து 

இதுதான் வழியென்றே பேசுவார் 

இறுதிவரை எப்போதும் நடத்துவார் 

இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்

We use cookies to give you the best experience. Cookie Policy