Back

300 . Kan kalangaamal | கண் கலங்காமல் 

300 . கண் கலங்காமல் 

F – Maj / 3 / 4 / T – 135 

கண் கலங்காமல் காத்தீரய்யா 

கால் இடறாமல் பிடித்தீரய்யா 

உயிரோடு வாழும் நாட்களெல்லாம் 

உம்மோடு கூட நடந்திடுவேன் 

உம்மோடு கூட நடந்திடுவேன் 

உயிரோடு வாழும் நாட்களெல்லாம் 

1 . ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட 

எடுத்துக் கொண்டீரய்யா 

பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது 

மகிமையின் கிரீடம் என் தலைமேல் 

2 . நோவா நடந்ததால் உம் கண்களில் 

கிருபை கிடைத்ததையா 

குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி 

வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா 

3 . ஆபிரகாம் நடத்தான் உம்மோடுகூட 

சிநேகிதன் என்றழைத்தீர் 

செய்யப்போவதை மறைப்பேனோ என்று 

தெரிவித்தீர்  உமது திட்டங்களை 

4 , உடமையாய் நடந்த எசேக்கியா ராஜா 

விண்ணப்பம் கேட்டீரையா 

கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று 

விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்

We use cookies to give you the best experience. Cookie Policy