Back

302 . Aakathathu ethvumillai | ஆகாதது எதுவுமில்லை 

302 . ஆகாதது எதுவுமில்லை 

E – min / 6 / 8 / T – 110 

ஆகாதது எதுவுமில்ல – உம்மால் 

ஆகாதது எதுவுமில்ல 

அகிலம் அனைத்தையும் 

உண்டாக்கி ஆளுகின்றீர் 

1 . துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் 

வெட்டுண்டு மடியச் செய்தீர்  

உம்மால் ஆகும் , எல்லாம் ஆகும் – 2 

2 . அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று 

நடந்தானே இயேசு நாமத்தில் 

3 . கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு 

பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய் 

4 . கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை 

கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்  

5 . ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று 

இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே 

6 . எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில் 

எண்ணெய் மாவு குறையவில்லையே 

7 . ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே 

சேதமின்றிக் காப்பாற்றினீர் 

8 . கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம் சிறுவனங்கே 

சுகமானான் அந்நேரமே 

9 . தண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்படிந்து நிரப்பினதால்

திராட்சை ரசம் வந்ததையா 

We use cookies to give you the best experience. Cookie Policy