Back

309 . Karaikal Neengida | கறைகள் நீங்கிட 

309 . கறைகள் நீங்கிட 

D – Maj / 3 / 4 / T – 140 

கறைகள் நீங்கிட கைகள் கழுவி ( என் ) 

கர்த்தரைத் துதிக்கின்றேன்

பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி நான் வலம் வருகின்றேன்

1 . கர்த்தாவே உம் பேரன்பு , 

எப்போதும் என் கண் முன்னே 

வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ 

அர்ப்பணித்தேன் – உம் 

ஆராதனை ஆராதனை 

ஆயுள் எல்லாம் ஆராதனை 

அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் 

அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 

2 . அறுவடையின் எஜமானனே , 

அரணான ( என் ) அடைக்கலமே 

அல்பாவும் ஒமேகாவும் , 

தொடக்கமும் முடிவும் நீரே 

3 . இரக்கங்களின் தகப்பனே , 

இளவயதின் வழிகாட்டியே 

ஜீவிக்கின்ற மெய்தேவனே , 

ஜீவனின் அதிபதியே 

4 . நித்தியானந்த சக்ராதிபதி , 

நீர் ஒருவரே மாவேந்தர் 

அரசர்க்கெல்லாம் அரசர் நீர் , 

பேரின்பக் கடவுள் நீரே 

5 . மகா மகா நீதிபரர் , 

மகத்துவங்கள் நிறைந்தவர் 

மீட்பளிக்கும் வல்லமையே , 

சாவாமை உள்ளவரே 

6 . எல்லாருக்கும் நீதிபதி , 

சர்வத்தையும் உருவாக்கினீர் 

சகல கிருபையும் நிறைந்தவர் , 

சத்தியமானவரே

7 , உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தர் , 

நன்மைகளின் பிறப்பிடமே 

யோனாவிலும் பெரியவரே , 

பிரதான மேய்ப்பர் நீரே 

We use cookies to give you the best experience. Cookie Policy