Back

319 . Pakalnera paadal | பகல்நேரப் பாடல் 

319 . பகல்நேரப் பாடல் 

D – Maj / 3 / 4 / T – 135 

பகல்நேரப் பாடல் நீரே 

இரவெல்லாம் கனவு நீரே 

மேலான சந்தோஷம் நீரே 

நாளெல்லாம் உமைப் பாடுவேன் – என் 

1 . எருசலேமே உனை மறந்தால்  

வலக்கரம் செயல் இழக்கும் 

மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில் 

நாவு ஒட்டிக் கொள்ளும் – என் 

மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா 

என் மணவாளரே உமை மறவேன்

2 . கவலைகள் பெருகி கலங்கும்போது 

மகிழ்வித்தீர் உம் அன்பினால் 

கால்கள் சறுக்கி தடுமாறும்போது 

தாங்கினீர் கிருபையினால் – என் 

3 . தாய்மடி தவழும் குழந்தைபோல 

மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் 

இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்

உம்மையே நம்பியுள்ளேன் – மகிழ்ச்சி 

4 . பார்வையில் செருக்கு எனக்கில்லை 

இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை 

பயனற்ற உலகத்தின் செயல்களிலே 

பங்கு பெறுவதில்லை

We use cookies to give you the best experience. Cookie Policy