Back

321 . Raja Ummai | இராஜா உம்மைப் 

321 . இராஜா உம்மைப் 

C – Maj / 4 / 4 / T – 95 

இராஜா உம்மைப் பார்க்கணும் 

இராப்பகலாய் துதிக்கணும் 

வருகைக்காய் காத்திருக்கின்றேன் 

எப்போது வருவீர் ஐயா 

1 . இறுதிக்காலம் இதுவே என  

அறிந்து கொண்டேன் நிச்சயமாய் 

உறக்கத்தில் இருந்து நான் 

உமைக்காண விழித்துக் கொண்டேன் 

வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே 

வழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன் 

2 . மணமகனை வரவேற்கும் , 

மதி உடைய கன்னிகை போல 

விளக்கோடு ஆயில் ஏந்தி 

உமக்காக வெளிச்சமானேன் – வரவேண்டும் 

3 . உண்மையுள்ள ஊழியனாய் , 

நீர் கொடுத்த தாலந்தை 

பயன்படுத்தி பெருக்கிடுவேன் 

மகிழ்ச்சியில் பங்கடைவேன் 

4 . தாராளமாய்க் கொடுத்திடுவேன் , 

தாங்கிடுவேன் ஊழியங்கள் 

அனாதை ஆதரவற்றோர் ‘ 

கண்ணீரைத் துடைத்திடுவேன் 

5 . ஊழியத்தில் உதவிடுவேன் , 

புத்தி சொல்வேன் போதிப்பேன் ” 

இறைவாக்கு உரைத்திடுவேன் 

எப்போதும் துதித்திடுவேன் 

6 . அந்தகார கிரியைகளை , 

அகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன் 

இச்சைக்கு இடங்கொடாமல் 

இயேசுவையே தரித்துக் கொண்டேன் 

7 . குடிவெறி களியாட்டம் 

வேசித்தனம் விட்டுவிட்டேன்

சண்டைகள் , குறை சொல்லுதல் 

அடியோடு வெறுத்துவிட்டேன்  

8 . வீண்பெருமை தேடாமல் ,

பொறாமை கொள்ளாமல் 

இழிவான உணர்வுகளை , 

சிலுவையிலே அறைந்துவிட்டேன் 

We use cookies to give you the best experience. Cookie Policy