Back

343 . Appa Um Paatham | அப்பா உம் பாதம் 

D – Maj / 4 / 4 / T – 92 

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் 

அன்பின் தகப்பன் நீர்தானைய்யா 

செய்த பாவங்கள் கண்முன்னே 

வருந்துகிறேன் நான் கண்ணீரோடு 

என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும் 

கல்வாரி இரத்தத்தாலே 

நான் பனியைப் போல வெண்மையாவேன் 

முற்றிலும் வெண்மையாவேன் 

இயேசையா ( 4 ) 

1 . துணிகரமாய் நான் தவறு செய்தேன் 

துணிந்து பாவம் செய்தேன் 

நோக்கிப் பார்க்க பெலன் இல்லையே 

தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக் 

2 . கிழக்கு மேற்கு உள்ள தூரம் 

உந்தன் இரக்கம் உயர்ந்ததையா 

இல்லையே எல்லை உம் அன்பிற்கு 

இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா 

3 . என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால் 

உம்முன்னே நிற்க முடியாதையா 

தகப்பன் மகனை மன்னிப்பதுபோல் 

மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா 

4 . முள்முடி கிரீடம் பார்க்கின்றேன் 

முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன் 

ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா 

தேவனே நான் என்ன சொல்வேன் 

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் 

அன்பின் தகப்பன் நீர்தானையா 

கிருபையின்படியே மனமிரங்கி 

மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா 

இயேசையா நன்றி ( 4 ) 

We use cookies to give you the best experience. Cookie Policy