Back

36 .Nalaya Thinathai | நாளைய தினத்தை

C – min | 2 / 4 / T – 130

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை 

நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் மத் . 6 : 34 

1 . ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் 

எதற்கும் பயப்படேன் 

அவரே எனது வாழ்வின் பெலனானார் 

யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா

 2 . கேடு வரும் நாளில் கூடார மறைவினிலே 

ஒளித்து வைத்திடுவார் 

கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் 

கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா சங் . 27 : 1

3 . தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் 

கர்த்தர் சேர்த்துக் கொள்வார் . சங் . 27 : 10

கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன் 

புதுபெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா ஏசா . 40 : 31 

We use cookies to give you the best experience. Cookie Policy