Back

362 . Yen Maganae | ஏன் மகனே 

E – Maj / 6 / 8 / T – 100 

ஏன் மகனே ( மகளே ) இன்னும் 

இன்னும் பயம் உனக்கு 

ஏன் நம்பிக்கை இல்லை ? 

உன்னோடு நான் இருக்க 

உன் படகு மூழ்கிடுமோ ? 

கரை சேர்ந்திடுவாய் ! ( நீ ) கலங்காதே

1 . நற்கிரியை தொடங்கியவர் 

நிச்சயமாய் முடித்திடுவார் – உன்னில் 

திகிலூட்டும் காரியங்கள் 

செய்திடுவார் உன் வழியாய் – கரை 

2 , நீதியினால் ஸ்திரப்படுவாய் 

கொடுமைக்கு நீ தூரமாவாய் 

திகில் உன்னை அணுகாது . 

பயமில்லா வாழ்வு உண்டு 

3 . படைத்தவரே உனக்குள்ளே 

செயலாற்றி மகிழ்கின்றார் உன்னைப் 

விருப்பத்தையும் ஆற்றலையும் 

தருகின்றார் அவர் சித்தம் செய்ய

 

4 . வழுவாமல் காத்திடுவார் 

நீதிமானாய் நிறுத்திடுவார் 

மகிமையுள்ள அவர் சமூகத்திலே 

மகிழ்வோடு நிற்கச் செய்வார்

 

5 . வழி தவறி சாய்ந்தாலும் இதுதான்  

வழி குரல் கேட்கும் 

கூப்பிடுதல் சத்தம் கேட்பார் 

மனம் இரங்கி பதிலளிப்பார்

We use cookies to give you the best experience. Cookie Policy