Back

363 . Nambivantha | நம்பி வந்த

F – Min / 4 / 4 / T – 120 

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்  

நன்மைகள் ஏராளம் 

நம்புகிறேன் நம்புகிறேன் 

நம்பத்தக்க தகப்பனே 

1 . மனிதரின் சூழ்ச்சியினின்று 

மறைத்துக் காத்துக் கொள்வீர் 

நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள் 

அணுகாமல் காப்பாற்றுவீர் 

2 . என் பெலன் நீர்தானே 

கேடகமும் நீர்தானே 

சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன் 

பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான் 

3 . கானானியப் பெண் ஒருத்தி  

கத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள் 

அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று 

பாராட்டிப் புதுமை செய்தீர் 

4 . கிருபை சூழ்ந்து கொள்ளும் 

உம் பேரன்பு பின்தொடரும் 

கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும் 

காலமெல்லாம் புகழ் பாடும் 

5 . குருடன் பர்த்திமேயு 

கூப்பிட்டான் நம்பிக்கையோடு 

தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று 

ஜெபித்து பார்வை பெற்றான் 

6 . நம்பி வந்த குஷ்டரோகியை 

நலமாக்கி அனுப்பினீரே 

மரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர் 

யவீர் உம்மை நம்பினதால் 

7 . இக்கட்டு துன்ப வேளையில் 

காக்கும் அரணானீர் 

பூரண சமாதானம் பூரண அமைதி 

தினம் தினம் நிரப்புகிறீர்

We use cookies to give you the best experience. Cookie Policy