Back

364 . Thaaiyin Madiyil | தாயின் மடியில்

C – Maj / 4 / 4 / T – 88 

தாயின் மடியில் குழந்தை போல 

திருப்தியாய் உள்ளேன் 

கலக்கம் எனக்கில்லையே 

கவலை எனக்கில்லையே 

1 . யேகோவா தேவன் தாயானார் 

இன்றும் என்றும் பெலன் ஆனார் 

பால் அருந்தும் குழந்தை போல 

பேரமைதியாய் உள்ளேன் 

கலக்கம் எனக்கில்லையே 

கவலை எனக்கில்லையே 

நற்செயல்கள் செய்ய 

தேவையானதெல்லாம் 

மிகுதியாய்த் தந்திடுவார் 

2 . எந்த நிலையிலும் எப்போதும்  

தேவையானதெல்லாம் தருவார் 

ஊழியம் செய்ய போதுமான 

செல்வம் தந்து நடத்திடுவார் – கலக்கம் 

3 . கீழ்மையாக விடமாட்டார் 

மேன்மையாகவே இருக்கச் செய்வார் 

கடன் வாங்காமல் வாழச் செய்வார் 

கொடுத்துக் கொடுத்து பெருகச் செய்வார் 

4 . ஏற்ற காலத்தில் மழை பெய்யும் 

கையின் கிரியைக்கு பலன் உண்டு 

கர்த்தரே தனது கருவூலமாம் 

பரலோகம் திறந்தார் எனக்காக 

5 . நீதிமான் பாதை நண்பகல் வரைக்கும் 

அதிகமதிகமாய் பிரகாசிக்கும் 

சூரிய பிரகாசம் போலிருக்கும் 

ஊழியம் வளரும் நிச்சயமாய் 

We use cookies to give you the best experience. Cookie Policy