Back

369 . Iraivanai Nambi | இறைவனை நம்பி

E – Maj / 2 / 4 / T – 120 

இறைவனை ( இயேசுவை ) நம்பியிருக்கிறேன் 

எதற்கும் பயப்படேன் 

இவ்வுலகம் எனக்கெதிராய் 

என்ன செய்ய முடியும் 

1 . பயம் என்னை ஆட்கொண்டால் 

பாடுவேன் அதிகமாய் 

திருவசனம் தியானம் செய்து 

ஜெயமெடுப்பேன் நிச்சயமாய் 

அச்சம் மேற்கொள்ளாது 

இறை அமைதி என்னை காக்கும் 

இவ்வுலகம் எனக்கெதிராய் 

என்ன செய்ய முடியும் 

2 . என் சார்பில் இருக்கின்றீர் 

என்பதை நான் அறிந்து கொண்டேன் 

எதிராக செயல்படுவோர் 

திரும்புவார்கள் பின்னிட்டு – அச்சம் 

3 . சாவினின்று என் உயிரை  

மீட்டீரே கிருபையினால் 

உம்மோடு நடந்திடுவேன் 

உயிர்வாழும் நாட்களெல்லாம் 

4 , துயரங்களின் எண்ணிக்கையை 

கணக்கெடுக்கும் தகப்பன் நீர் – என் 

கண்ணீரைத் தோற்பையில் 

சேர்த்து வைத்துப் பதில் தருவீர் 

5 . மறக்கவில்லை என் பொருத்தனைகள் 

செலுத்துகிறேன் நன்றி பலி 

காலடிகள் இடறாமல் 

காத்தீரே நன்றி ஐயா 

We use cookies to give you the best experience. Cookie Policy