Back

374 . Eppoluthu Um Sannithiyil | எப்பொழுது உம் சந்நிதி

F Maj / 4 / 4 / T – 90 


எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் 

தாகமாயிருக்கின்றேன் 

ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன் 

அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன் 


1 , தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல் 

என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது 

இரட்சகரே உம் வருகையிலே 

நிச்சயமாய் உம் முகம் காண்பேன் 

தாகமாய் இருக்கின்றேன் 

அதிகமாய் துதிக்கின்றேன் – எப்பொ 


2 . ஆத்துமாவே நீ கலங்குவதேன் 

சோர்ந்து போவது ஏன் 

கர்த்தரையே நம்பியிரு 

அவர் செயல்கள் நினைத்துத் துதி – இரட்சகரே 


3 . காலைதோறும் உம் பேரன்பைக் 

கட்டளையிடுகிறீர் 

இரவுபகல் உம் துதிப்பாடல் 

என் நாவில் ஒலிக்கிறது 

We use cookies to give you the best experience. Cookie Policy