Back

385 . Eppozhuthum Evvaelaiym | எப்பொழுதும் எவ்வேளையும்

F – maj 6 / 8 T – 128 

எப்பொழுதும் எவ்வேளையும் 

நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் 

இரவு பகல் எந்நேரமும் 

உம் திருநாமம் உயர்த்திடுவேன்


உம்மைப் புகழ்வேன் பெலத்தோடு 

உம்மைப் பாடுவேன் சுகத்தோடு 


1 . தடுக்கி விழுந்த யாவரையும் 

தாங்கி நடத்தும் தகப்பன் நீரே 

தாழ்த்தப்பட்ட அனைவரையும் 

தூக்கி நிறுத்தும் துணையாளரே – உம்மைப் 


2 . நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும் 

தகப்பன் அருகில் இருக்கின்றீர் 

அஞ்சி நடப்போர் விருப்பங்களை 

பூர்த்தி செய்யும் பரிசுத்தரே – உம்மைப் 


3 . உணவுக்காக உயிரினங்கள் 

உம்மை நோக்கிப் பார்க்கின்றன 

ஏற்ற வேளையில் உணவளித்து 

ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் – உம்மைப் 


4 . இரக்கம் கிருபை உடையவரே 

கருணை அன்பு நிறைந்தவரே 

நன்மை செய்யும் நாயகனே 

நாவு அனைத்தும் உம்மைப் பாடுமே – உம்மைப் 

We use cookies to give you the best experience. Cookie Policy