Back

386 . Aavalaai irukkinraar | ஆவலாய் இருக்கின்றார்

F – Maj 6 / 8 T – 90 

ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட 

அன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார் 


நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர் ( உன்மேல் ) 

மனதுருகும்படி காத்திருப்பவர் – நீதி 


1 . சீயோன் மக்களே எருசலேம் குடிகளே 

இனி ஒருபோதும் அழமாட்டீர்கள் 

கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார் 

கேட்ட உடனேயே பதில் தருகின்றார் – நீதி 


2 இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலே 

உன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டு 

எண்ணி முடியாத அதிசயங்கள் 

கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில் – நீதி 


3 . வலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும் 

வழிதவறி நாம் நடந்து சென்றாலும் 

இதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள் 

என்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும் – நீதி 

We use cookies to give you the best experience. Cookie Policy