Back

389 . Kalangi Ninra Velaiyil | கலங்கி நின்ற வேளையில்

C – Maj / 6 / 8 / T – 128 

கலங்கி நின்ற வேளையில் 

கைவிடாமல் காத்தீரே தகப்பனே , தகப்பனே – 2

நீர் போதும் என் வாழ்வில் – 4 – கலங்கி 


1 . உடைந்த நொந்த உள்ளத்தோடு 

அருகில் நீர் இருக்கின்றீர் – 2 

தாங்கிடும் பெலன் தந்து 

தப்பிச் செல்ல வழி செய்யும் 

தகப்பனே ( 2 ) தகப்பனே – நீர் போதும் 


2 . துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம் 

திருவசனம் தேற்றுதையா – 2 

தீமைகளை நன்மையாக்கி 

தினம் தினம் நடத்திச் செல்லும் 

தகப்பனே ( 2 ) தகப்பனே – நீர் போதும் 


3 . நித்திய அன்பினால் அன்புகூர்ந்து 3 

உம் பேரன்பால் இழுத்துக் கொண்டீர் – 2 

காருண்யம் தயவால் 

காலமெல்லாம் சூழ்ந்து காக்கும் 

தகப்பனே ( 2 ) தகப்பனே – நீர் போதும் 

We use cookies to give you the best experience. Cookie Policy