Back

398 . Vetppamigi Naatkalil | வெப்பமிகு நாட்களில்

E – Maj / 2 / 4 / T – 120 


வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே 

வறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2 


என் வேர்கள் தண்ணீருக்குள் 

இலையுதிரா மரம் நான் – 2 


எப்போதும் பசுமை நானே 

தப்பாமல் கனி கொடுப்பேன் – 2 


நம்பியுள்ளேன் கர்த்தரையே 

உறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2 


பாக்கியவான் பாக்கியவான் – 2 – நான் 

என்றென்றும் பாக்கியவான் 


1 . கிருபை சூழ்ந்து கொள்ளும் 

பேரன்பு பின் தொடரும் – உம் 

இதயம் அகமகிழும் – என் 

இன்னிசை தினம் பாடும் – 2 – நம்பியுள்ளேன் 


2 . இக்கட்டு துன்ப வேளையில் 

காக்கும் தகப்பன் நீரே – 2 

பூரண சமாதானம் – உம் 

தினம் தினம் இதயத்திலே – 2 


3 . குருடன் பர்த்திமேயு 

கூப்பிட்டான் நம்பிக்கையோடு – 2 

இயேசுவே இரங்கும் என்றான் 

பார்வை பெற்று பின் தொடர்ந்தான் – 2 


4 . நம்பி வந்த குஷ்டரோகியை 

நலமாக்கி அனுப்பினீரே 

யவீரு உம்மை நம்பியதால் 

மகள் அன்று சுகம் பெற்றாள்

We use cookies to give you the best experience. Cookie Policy