Back

400 . Vaaikaalgal | வாய்க்கால்கள்

D – Maj / 4 / 4 / T – 93 


வாய்க்கால்கள் ஓரத்திலே 

நடப்பட்ட மரம் நானே 

என் வேர்கள் தண்ணீருக்குள் 

இலையுதிரா மரம் நான் – 2 


1 . செய்வதெல்லாம் வாய்க்கும் 

வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2 

பசுமை எப்போதுமே தப்பாமல் 

கனி கொடுப்பேன் – 2 

எப்போதும் பசுமை 

தப்பாமல் கனிகள் – 2 


2 . கர்த்தரின் திரு வேதத்தில் 

இன்பம் தினம் காண்பேன் – 2 

இரவு பகல் எப்போதும் ( நான் ) 

தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும் 


3 . நீதிமான் செல்லும் வழிகள் 

கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2 

துன்மார்க்கர் பாதையெல்லாம் 

அழிவில்தான் முடியும் – 2 – எப்போதும் 


4 . துன்மார்க்கர் ஆலோசனை 

கேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2 

பொல்லாரின் சொற்கள்படி 

நடவாமல் தினம் வாழ்வேன் – 2 – எப்போதும் 

We use cookies to give you the best experience. Cookie Policy