Back

404 . Unnathamanavarae | உன்னதமானவரே

D – Maj / 4 / 4 / T – 120 


உன்னதமானவரே 

என் உறைவிடம் நீர்தானே – 2 

நீர்தானே என் உறைவிடம் 

நீர்தானே என் புகலிடம் 

ஆதலால் ஆபத்து நேரிடாது 

எந்த தீங்கும் மேற்கொள்ளாது  

கால் கல்லில் மோதாமலே 

காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே 


1 . சகலமும் படைத்தவரே 

சர்வ வல்லவரே – 2 

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் 

நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால் 


2 . நான் நம்பும் தகப்பன் நீர் என்று 

நான் தினம் சொல்லுவேன் – 2

வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய் 

தப்புவித்து காப்பாற்றுவீர் – 2 


3 . மன்றாடும் போதெல்லாம் 

பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 – நான் 

ஆபத்து நேரம் என்னோடு இருந்து 

தப்புவித்து கனப்படுத்துவீர் 


4 . நீடிய ஆயுள் தந்து 

திருப்தியாக்குகிறீர் 

உமது சிறகால் மூடி மூடி 

மறைத்து பாதுகாக்கின்றீர் 


5 . வாஞ்சையாய் இருப்பதால் 

விடுதலை எனக்குண்டு 

உம்திரு நாமம் அறிந்ததால் 

எனக்கு உயர்வு நிச்சயமே

We use cookies to give you the best experience. Cookie Policy