Back

410 . Rajavagiya | இராஜாவாகிய

D # – 125 – 3 / 4 

இராஜாவாகிய என் தேவனே 

உம்மை நான் உயர்த்துகிறேன் 

உம் திருநாமம் எப்பொழுதும் 

என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன் 

நாள்தோறும் நான் போற்றுவேன் 

என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் 


1 . மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் 

துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர் 

துதி உமக்கே கனம் உமக்கே 

மகிமை உமக்கே என்றென்றைக்கும் 


உமக்கே ( 3 ) ஸ்தோத்திரம் 

உயிருள்ள நாளெல்லாம் 


2 , எல்லார் மேலும் தயவுள்ளவர் 

எல்லாருக்கும் நன்மை செய்பவர் 

உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும் 

பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள் 


3 . நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும் 

ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர் 

கையை விரித்து சகல உயிர்களின் 

விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம் 


4 . வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர் 

கிரியைகளின் மேல் கிருபையுள்ளவர்

நம்பி கூப்பிடும் அனைவருக்கும் 

அருகில் இருக்கின்றீர் அரவணைக்கின்றீர்


5 . அன்புகூர்கின்ற அனைவரின் மேல் 

கண்காணிப்பாய் இருக்கின்றீர் 

பயந்து நடக்கின்ற உம் பிள்ளைகளின் 

வாஞ்சைகளை நிறைவேற்றுகின்றீர் 


6 . தடுக்கி விழுகிற யாவரையும் 

தாங்கி தாங்கி நடத்துகிறீர் 

தாழ்த்தப்பட்ட அனைவரையும் 

தூக்கி உயரத்தில் நிறுத்துகிறீர் 

We use cookies to give you the best experience. Cookie Policy