Back

415 . Erusalem Erusalem | எருசலேம் எருசலேம் 

 Em – 130 – 3 / 4 

எருசலேம் எருசலேம் உன்னை 

சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் 

உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம் 

அரண்மனைக்குள்ளே பூரண சுகம் 


1 . கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார் 

ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் 

தயை செய்யும் காலம் வந்தது 

குறித்த நேரமும் வந்துவிட்டது 

விழித்தெழு சீயோனே 

வல்லமையை தரித்துக்கொள் 


2 . தூரத்துண்ட இஸ்ரவேலரை 

துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் 

சீயோனை திரும்ப கட்டுகிறார் 

மகிமையிலே காட்சியளிப்பார்


3 . பூமியின் ஜனங்களுக்குள்ளே 

புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாய் 

உன்னிலிருந்து வேதம் வெளிப்படும் 

கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் 


4 . இரவும் பகலும் மெளனமாயிராத 

ஜாமக்காரர் உன் மதில்மேல் 

அமரிக்கையாய் இருப்பதில்லை 

அமர்ந்திருக்க விடுவதில்லை 


5 . மலைகள் குன்றுகள் நடுவே 

மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் ம 

மக்கள் இனம் தேடி வருவார்கள் . 

ஓடி வந்து மீட்படைவார்கள் 


6 . கர்த்தர் உன்னை விரும்பினபடியால் 

தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர் 

அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் 

அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான் 

We use cookies to give you the best experience. Cookie Policy