Back

419. Paadukaapar Nerukadiyil | பாதுகாப்பார் நெருக்கடியில் 

D-Maj / 4/4 / T-77

பாதுகாப்பார் நெருக்கடியில்

பதில் தருவார் ஆபத்திலே

துணையாய் வருவார் உதவி செய்வார் 

கைவிடார் கைவிடார்


1. துதிபலி அனைத்தையுமே

பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – நம் – 2

நாம் செய்த நற்கிரியைகளை

மறவாமல் நினைக்கின்றார் – 2 


2. இதயம் விரும்புவதை

நமக்கு தந்திடுவார்

ஏக்கங்கள் அனைத்தையும்

செய்து முடித்திடுவார் – நம் 


3. மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்

வரும் எழுப்புதல் நாம் காண்போம்

நம் தேவன் நாமத்தினால்

கொடியேற்றி கொண்டாடுவோம்


4. இரதங்களை நம்பும் மனிதர்

முறிந்து விழுந்தார்கள் சங். 20:7

கர்த்தரையே நம்பும் நான்

நிமிர்ந்து நிற்கின்றேன்


(இதே இராகத்தில் பின்வருமாறு நன்றி பாடலாக பாடலாம்)


பாதுகாத்தீர் நெருக்கடியில்

பதில் தந்தீர் ஆபத்திலே

துணையாய் வந்தீர் உதவி செய்தீர்

நன்றி ஐயா நன்றி ஐயா


1. துதிபலி அனைத்தையுமே

பிரியமாய் ஏற்றுக்கொண்டீர் – 2

நான் செய்த நற்கிரியைகளை

மறவாமல் நினைக்கின்றீர் – 2


2. இதயம் விரும்பினதை

எனக்கு தந்தீரே – 2

ஏக்கங்கள் எல்லாமே

இதுவரை நிறைவேற்றினீர் – 2

We use cookies to give you the best experience. Cookie Policy