Back

421. En Kanmalaium Meetparumaana | என் கன்மலையும் மீட்பருமான

D-Maj / 4/4 / T-77

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே

என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும்


1. துணிகர பாவ கிரியை

மேற்கொள்ள முடியாது – 2

வசனம் தியானிப்பதால்

வாழ்வேன் பரிசுத்தமாய் – 2


இயேசையா இரட்சகரே

இரத்தத்தால் கழுவினீரே


2. வார்த்தையின் வல்லமையால்

உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – (உம்)

பாதையில் நடப்பதினால்

ஞானம் பெறுகின்றேன் – உம்


3. இதயம் மகிழ்கின்றது (உம்)

வசனம் உட்கொள்வதால்

கண்கள் மிளிர்கின்றன

வார்த்தையின் வெளிச்சத்தினால்


4. தங்கம் பொன்னைவிட

அதிகமாய் விரும்புகிறேன்

தேனின் சுவையைவிட

சுவைத்து மகிழ்கின்றேன்


5. வாயின் சொற்களினால்

எச்சரிக்கப்படுகின்றேன் – உம்

கைக்கொண்டு வாழ்வதினால்

மிகுந்த பலனுண்டு 

We use cookies to give you the best experience. Cookie Policy