Back

60 . ummai pirinthu | உம்மைப் பிரிந்து

60 . உம்மைப் பிரிந்து C – min | 4 / 4 | T – 94 

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா 

இயேசையா இயேசையா ( 2 ) 

1 . திராட்சை செடியின் கொடியாக 

உம்மில் நிலைத்திருப்பேன் 

மிகுந்த கனி கொடுப்பேன் 

உம் சீடனாயிருப்பேன் – நான் யோவா . 15 : 5 , 8 

2 . முன்னும் பின்னும் என்னை நெருக்கி 

உம் கரம் வைக்கின்றீர் 

உமக்கு மறைவாய் எங்கே போவேன் 

உம்மை விட்டு எங்கே ஓடுவேன் – நான் சங் . 139 : 5 , 7

3 . பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே 

பயந்து போக மாட்டேன் 

துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் 

சோர்ந்து போகமாட்டேன் – நான் 

4 . நடந்தாலும் படுத்திருந்தாலும் சங் . 139 : 3 

என்னை சூழ்ந்து உள்ளீர் 

என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் 

எல்லாம் உம் கிருபை – ஐயா 

5 . கர்த்தாவே என்னை ஆராய்ந்து சங் . 139 : 1 – 2 

அறிந்து இருக்கின்றீர் 

உட்காருதலையும் எழுதலையும் 

அறிந்து இருக்கின்றீர்

We use cookies to give you the best experience. Cookie Policy