Back

67 . aaruthalin theivamae | ஆறுதலின் தெய்வமே

67 . ஆறுதலின் தெய்வமே

C – min / 6 / 8 / T – 115

ஆறுதலின் தெய்வமே

உம்முடைய திருச் சமூகம்

எவ்வளவு இன்பமானது 

1 . உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் 

உண்மையிலே பாக்கியவான்கள்

தூய மனதுடன் துதிப்பார்கள் 

துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென் 

2 . உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் 

உண்மையிலே பாக்கியவான்கள்

ஓடினாலும் களைப்படையார் 

நடந்தாலும் சோர்வடையார் – ஆமென் 

3 . கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம் 

களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள் 

வல்லமை மேலே வல்லமை கொண்டு 

சீயோனைக் காண்பார்கள் – ஆமென்

4 . வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட 

உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது

ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் 

வாசலில் காத்திருப்பேன் – ஆமென் 

5 . ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி 

ஆர்வமுடன் கதறுகின்றது

உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும் 

கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்

We use cookies to give you the best experience. Cookie Policy