68 . எத்தனை நன்மைகள்
D – Maj / 4 / 4 / IT – 112
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் – நான்
நன்றி ராஜா . . . . . . . நன்றி ராஜா . . . . . . . ( 4 )
1 . தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன்
2 . பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடைக் கட்டினீர்
3 . பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே
4 . எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர்
5 . கரங்களைப் பிடித்து கண்மணி போல ,
காலமெல்லாம் காத்தீர்
6 . பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி ”
பூரண சுகமாக்கினீர்
7 . முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி –
சாத்தானை ஜெயித்து விட்டீர்
8 . நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா –