D – min | 3 / 4 | T – 140
கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
கவலை மறந்து காத்திருப்போம்
1 . கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்
நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்
அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்
2 . நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே
நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே
உதவி செய்து காத்திடுவார்
உள்ளத்தில் தங்கி நடத்திடுவார்
3 . வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே
ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்
கர்த்தரையே சார்ந்திருப்போம்
அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார்
4 . சுயபுத்தியில் சாய்ந்திடாமல்
முழுஉள்ளத்தோடு நம்பிடுவோம்
வழிகளெல்லாம் நினைத்திடுவோம்
வாழ்வின் பாதை காட்டிடுவார்