Back

92 . vatratha neerutru | வற்றாத நீரூற்று

E – min 6 / 8 T – 120 

வற்றாத நீரூற்று போலிருப்பாய் 

வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய் 

கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய் 

காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்  

1 . வாய்க்கால்கள் ஓரம் 

நடப்பட்ட மரமாய் 

எப்போதும் கனி கொடுப்பாய் 

தப்பாமல் கனி கொடுப்பாய்

2 . ஓடும் நதி நீ 

பாயும் இடத்தில் 

உயிரெல்லாம் பிழைத்திடுமே 

சுகமாக வாழ்ந்திடுமே

3 . பலநாட்டு மக்கள் 

உன் நிழல் கண்டு 

ஓடி வருவார்கள் 

பாடி மகிழ்வார்கள்

4 . பஞ்ச காலத்தில் 

உன் ஆத்துமாவை 

திருப்தியாக்கிடுவார் 

தினமும் நடத்திடுவார்

We use cookies to give you the best experience. Cookie Policy