Back

99 . Naesarae um thirupaatham | நேசரே உம் திருபாதம்

F – Maj / 3 / 4 | T – 155 

நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன் 

நிம்மதி நிம்மதியே

ஆர்வமுடனே பாடித் துதிப்பேன் 

ஆனந்தம் ஆனந்தமே

அடைக்கலமே அதிசயமே 

ஆராதனை ஆராதனை 

1 . உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து

உள்ளமே பொங்குதய்யா 

நல்லவரே நன்மை செய்தவரே 

நன்றி நன்றி ஐயா 

வல்லவரே நல்லவரே 

ஆராதனை ஆராதனை 

2 . பலியான செம்மறி பாவங்களெல்லாம் 

சுமந்து தீர்த்தவரே

பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ 

பாக்கியம் பாக்கியமே 

பரிசுத்தரே படைத்தவரே 

ஆராதனை ஆராதனை 

3 . எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும் 

உம்மை பிரியேன் ஐயா

சித்தமே செய்து சாட்சியாய் வாழ்வேன் 

நிச்சயம் நிச்சயமே 

இரட்சகரே இயேசு நாதா 

ஆராதனை ஆராதனை

We use cookies to give you the best experience. Cookie Policy